Sunday, June 9, 2013

மழை காலம் (கவிதை )




ஈரம் காயாத உள்ளாடை ,

 வாகனம் வாரியிறைத்த

குழி சகதி ,

மேற்கூரை ஒழுக 

இருக்கையில்

தண்ணீர் துளியுடன்

பேருந்து  பயணம் ,

உரசி உரசி எரிய மறுக்கும்

நமத்து போன தீக்குச்சி,.....

இவையெல்லாம் மீறி

உள்ளம் குளிர

உணர்வுகள்  சிலிர்க்க

 மண்ணில்

விழுந்து தெறிக்கும்

மழைத்துளி ஸ்பரிசத்தில்

ஜனிக்கும் மழைக்கால

மண் வாசனைக்கு

மயங்காதார் யாருமுண்டோ ..?


No comments:

Post a Comment