Saturday, June 29, 2013

இலையுதிர் காலம் ( கவிதை )













வசந்தத்தில் ஓர் நாள் ...

மடிகள் தலையணை

விரல்கள் கேசத்தில்

விளையாட மரகிளையில்

கிளிகள் கொஞ்சி பேசின

நம்மை போல் ..

பசு மரத்தில்

நாம் செதுக்கிய

நம் பெயர்கள்

இன்று வடுவாய்...

புரையோடிய என் இதயத்தின்

காயம் போல..

இப்போது இலையுதிர் காலம்

அந்த நினைவுகள்

நெஞ்சிலிருந்து உதிராமல் 

ஒற்றைமாய் நான் ..



No comments:

Post a Comment