Sunday, June 9, 2013

அரக்கர் (கவிதை )


உம் மண்ணை ஆண்ட

இலங்கேஸ்வரன் கூட

பிறன்மனை கவர்ந்தும்

ஜனகன் மகள் 

விரல் தீண்டவில்லை இறுதிவரை...

சிறார்களை சின்னாபின்னமாக்கி

சீதைகளை சிதைத்து

சிதையுடன் புணர்ந்து 

அரக்கர் வம்சம்தான்  நாங்கள்

என  நீவிர் நிருபித்ததால்

நம்புகிறேன் ராமாயணத்தை...

No comments:

Post a Comment