Sunday, June 16, 2013

கொன்றால் பாவம் (கவிதை)

உங்கள் நாவின்
ருசிக்காக தினம்
மரித்தோம்  என்றன
வெள்ளாடுகள்..
உடைக்காக மரித்தோம்  
என்றன பட்டு பூச்சிகள் ..
நீவிர் புசித்த தேகம் போக 
எஞ்சிய எங்கள் தோல்
உங்கள் காலணி
என்றன ஆவினம் ...
குண்டடி பட்டு மரிக்கும் முன்
மானினம் கேட்டன
உம் பாவங்களுக்கு
மரித்தவரை
மட்டும் கடவுள் என்றீர் ...

No comments:

Post a Comment