Saturday, June 29, 2013

நம்பிக்கை (கவிதை )



காற்றிலிருந்து விபூதி

வாயிலிருந்து சிவலிங்கம்

உடல் முழுதும் பரவிய புற்று

ஒரு நாளில் மாயமாய் மறைய

பக்கவாதம் கண்டு

சக்கர நாற்காலியில் இருந்தவர்

எழுந்து ஓடும்

அற்புதங்கள்

பள்ளி வாசலில் கரீம் பாய்

முகத்தில் ஊத ஓடிவிடும்

குழந்தையின் குளிர் ஜுரம்..

மந்திரத்தில் மாங்காய்

நம்புவோருக்கு....

No comments:

Post a Comment