Sunday, May 15, 2011

எது கலாச்சாரம் ?

நெடு நாட்களாகவே என்னுள் ஒரு கேள்வி .. கலாச்சாரம் என்பது என்ன.? பொதுவாக நாம் எல்லோருக்கும் நம் கலாச்சாரத்தின் மேல் ஒரு பெருமை உண்டு , அதே போல மேலை நாட்டு கலாச்சாரத்தின் மேல் ஒரு அவமதிப்பு உண்டு. இந்த விஷயத்தினை ஆழமாக யோசித்து பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். இந்தியாவில் பிறந்து வளர்ந்த அனுபவமும் மேல் நாட்டு கலாச்சாரத்தினை காணமுடிந்த வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால் நாம் எப்படி குருட்டாம் போக்கில் பல அனுமானங்களை நம்புகிறோம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நம் கலாச்சாரம் சிறந்தது என்றால் நம் நாட்டில் ஏன் இத்தனை முதியோர் இல்லங்கள்? AIDS -ல் தமிழகம் ஏன் கொடி கட்டி பறக்கிறது எப்படி இத்தனை Abortion clinics ? நாட்டில் நாளுக்கு நாள் ஏன் விவாகரத்து அதிகரித்து கொண்டே போகிறது ? செய்தி தாளில் ஏன் தினமும் கள்ள தொடர்பு கொலைகள்? உண்மையை சொல்லப்போனால் என் மேல் நாட்டு அனுபவத்தில் வயதான பெற்றோரை முகம் சுளிக்காமல் பார்த்துகொள்ளும் மகன்களையும் ,மகள்களையும் அதே போல நீண்ட வருடங்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக அன்பான தம்பதியரையும் நிறைய கண்டிருக்கிறேன். இங்கே dating என்பது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதற்காக சந்தித்து கொள்கிறார்கள். இதில் அவர்கள் வெளிப்படையாக இருக்கிறார்கள் . ஆனால் நம் ஊரில் கலாச்சாரம் என்ற போலி பயத்தில் சமுதாயத்துக்கு பயந்து ஒளிந்து ஒளித்து பார்க்கிலும் பீச்சிலும் சந்தித்து கொண்டு எதோ திருட்டு தனம் செய்வது பயந்து பயந்து காதலிக்க வேண்டிய சூழ்நிலை. கலாச்சாரம் என்ற போர்வையில் ஒருவனுக்கு ஒருத்தி என்று காலம் முழுவதும் கணவனும் மனைவியும் திருமணம் என்ற பந்தத்தில் ஒத்து வராவிட்டாலும் சகதியில் வாழ்வது என்ன கலாச்சாரம்? விவாகரத்தினால் குழந்தைகள் வாழ்கை பாதிக்குமென்றால் கணவன் மனைவி சண்டை சச்சரவு சூழல் மட்டும் ஒரு குழந்தைக்கு ஆரோக்யமானதா? அமெரிக்காவில் கணவன் மனைவி விவாகரத்து ஆனவுடன் குடும்ப நல நீதி மன்றம் எந்த பெற்றோர் வசம் குழந்தை இருந்தால் குழந்தைக்கு நல்லது என்று ஆய்வு செய்து அந்த பெற்றோர் வசம் குழந்தையை ஒப்படைக்கின்றனர். குழந்தையிடம் interview செய்து visitation வழங்கபடுகிறது. குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்த பின்னர்தான் எந்த முடிவும் எடுக்கப்படும்.இந்த சிஸ்டம் குழந்தைகள் நன்றாக புரிந்து கொள்ள முடிவதனால் அவர்களுக்கு phycological ஆக பாதிப்பை ஏற்படுவதில்லை. இவையெல்லாம் நான் சரி என்று சொல்லவில்லை. மேலை நாடுகளில் கணவன் மனைவி ஒத்து வராவிட்டால் சட்டை மாற்றுவது போல bye bye சொல்லிவிட்டு குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு விட்டு போய் கொண்டே இருப்பார்கள் என்ற நம் தவறான அனுமானத்தினை சுட்டி காட்டுகிறேன்.அதே போல இங்கே 18 வயதுக்கு பிறகு பிள்ளைகள் பெற்றோருக்கு பாரமாக இல்லாமல் தனியாக வாழ கற்று கொள்கிறார்கள். இதிலென்ன தவறு? விலங்குகளை பாருங்கள், குட்டி ஈன்ற பிறகு அவை சுயமாக வேட்டை ஆட கற்று கொள்ளும் வரைதான் தாயின் அரவணைப்பு இருக்கும். அதற்கு பிறகு அவை இந்த உலகத்தில் போராடி வாழ கற்று கொள்கின்றன. ஆனால் நம் சமுதாய முறையில் பல குடும்பங்களில் பிள்ளைகள் 30 வயது வரை கூட சுயமாக எந்த முடிவும் எடுக்க தெரியாமல் பெற்றோருக்கும் வயதான காலத்திலும் பாரமாக உள்ளனர். கூட்டு குடித்தனம் நல்ல கலாச்சாரம் என்று நாம் மார்தட்டி கொள்கிறோம். இந்த கால கட்டத்தில் கூட்டு குடும்பம் சாத்தியமா? நமக்கென்று ஒரு privacy இல்லாமல் ஒருவர் விஷயத்தில் ஒருவர் மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகம்?ஆண்டாண்டு காலமாக பெண்களின் கன்னித்தன்மை பெரிய விஷயமாக பேசப்படுகிறது. ஆனால் ஆணுக்கு அது ஒரு பெரிய விஷயமில்லை. நம் கலாச்சார "விதிகள்" நம் ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. திருமணம் வரை கன்னித்தன்மை என்பது நல்ல விஷயம் தான், ஆனால் அதை வைத்து எந்த ஒரு தனி மனிதரையும் எடை போடுவது என்பது என்பது கீழ்த்தரமான விஷயம். மேலும் நம் கலாச்சாரத்தில் பல ஆண்கள் ஒழுக்கமாக இருப்பதாக சொல்லிகொள்வதெல்லாம் உண்மையில் "சந்தர்பம்" கிடைக்காததால்தான். ஒரு நம்பிக்கையான ஆண் பெண் உறவில் ஒருவர் மற்றவருக்கு செய்யும் துரோகத்தினால் விளையும் வலி ஒரு இந்தியனுக்கும் சரி ஒரு அமெரிக்கனுக்கும் சரி ஒரே பாதிப்புதான்.அந்த உறவுகளின் வரையறைகள் மீறப்படும் போது ஏற்படும் பாதிப்புக்கள் எல்லோருக்கும் சமம்.கலாச்சாரம் ஒன்றுதான். இந்திய கலாச்சாரம் மேலை நாடு கலாச்சாரம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. மனித கலாச்சாரம்.என்னை பொறுத்த வரை கலாச்சாரம் என்பது தனி மனித ஒழுக்கம்.மனித உறவுகளை புனிதமாக நினைத்து அந்த உறவுகளுக்கு உண்மையாக இருத்தல். நான் இங்கே வாழ வேண்டிய சூழலில் உப்பிட்ட நன்றிக்காக மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு வக்காளத்து வாங்குவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். நம் பாரம்பரியத்தின் மீது எனக்கு என்றும் ஒரு அளவு கடந்த பெருமிதம் உண்டு. அதே சமயம் பிற கலாச்சாரத்தினை பற்றி முழுவதும் அறியாத தவறான அனுமானங்களும் தவறு என்பது என் தாழ்மையான கருத்து.
- பாலா

1 comment:

  1. சரியாக சொன்னீர்கள்...
    அமெரிக்க கலாச்சாரத்திற்கு எழுதிவிட்டீர்கள் அப்படியே "gulf " கலாச்சாரத்தை பற்றியும் எழுதுங்க pls

    ReplyDelete