Sunday, May 22, 2011

குழந்தை வளர்ப்பு

அமெரிக்காவில் நடத்தப்படும் கடுமையான Spelling Bee competition-ல் எப்போதும் இந்திய குழந்தைகள் முதலிடம் வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்திய குழந்தைகளின் திறமை எங்கே தம் குழந்தைகளின் வேலை வாய்ப்பை பாதிக்குமோ என்று அமெரிக்க பெற்றோர்கள் பயப்படும் அளவுக்கு இந்திய குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இதனை மேம்போக்காக பார்த்தால்இந்தியர்கள் எல்லோருமே பெருமைப்பட வேண்டிய விஷயம். ஆனால் எனக்குள் நான் கேட்டுகொண்டதுண்டு. எப்படி நமக்கு மட்டும்(சீனர்கள் கூட) இப்படிப்பட்டகுணம்?
பெரும்பான்மையான இந்திய அம்மாக்களை பார்த்தீர்களென்றால், குழந்தை பிறக்கும் வரை எல்லா கணவன் மனைவி போல வாழ்கையினை ஜாலியாக அனுபவிப்பார்கள். குழந்தை பிறந்து LKG போக துவங்கும் போது பிடிக்கும் ஒரு பேய்..அதுதான் COMPARISON பேய்..
பக்கத்துக்கு வீட்டு மலா குழந்தை நல்ல ஸ்கூல், அடுத்த வீட்டு கோபு போகிற ஸ்கூல் நல்ல ஸ்கூல் என்று...இந்த மனப்பான்மை ஒருவித மன நோயாக நம் இந்திய பெண்களை தாக்கி அவர்கள் கவனம் முழுவதும் கணவனின் தேவைகள் கூட இரண்டாம் பட்சமாக போய் தங்கள் குழந்தைகளை உலகத்திலேயே அறிவாளியாக ஆக்கியே தீருவேன் அன்று கங்கணம் கட்டிக்கொண்டு தங்கள் வாழ்கையை தியாகம் செய்து கடைசியில்
இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வியலை அவர்களுக்கு கற்று கொடுக்க மறந்து போவார்கள்.
அமெரிக்காவில் உலகத்திலேயே இளம் வயதில் டாக்டர் பட்டம்(guinness record )பெற்ற பாலா அம்பானி சகோதரர்களை கேள்வி பட்டுருப்பீர்கள். இளைய சகோதரனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். சில மாதங்களிலேயே விவாகரத்து ஆகி விட்டது. விவாகரத்து கொடுமை காரணமாக இந்தியா வந்த போது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து உள்ளே போட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு பெரிய அறிவாளி வாழ்வியலில் தோற்றதற்கு காரணம் அவர்கள் பெற்றோர். அவருக்கு வெளியே சென்று அடிபட்டு அனுபவ படிப்பினை அறிந்து கொள்ளும் வாய்பே கொடுக்க பட வில்லை.படிக்கும் காலத்தில் புத்தகங்களையே திணித்து திணித்து தம்மை சுற்றி நடக்கும் வாழ்வியல் நடப்புகளை கூட காண முடியாத அளவுக்கு புத்தக புழுக்களாக மாற்றி விடுகிறார்கள்.
"ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்"என்றார் வள்ளுவர். உண்மைதான். ஆனால் வாழ்வியலை தெரியாதவனை சான்றோன் என்று எப்படி ஒத்து கொள்ள முடியும் ? நம் புராணத்தில் ஒரு கதை உண்டு. ஒரு ஊரில் ஆற்றை கடக்க பரிசலில் செல்ல வேண்டும். பயணியாக பல நூல்களை கற்றறிந்த ஒரு ஞானி. படிக்காத ஒரு பாமரன் பரிசல் காரன். ஞானி கேட்கிறார் அந்த பாமரனிடம் " உனக்கு ராமாயணம் தெரியுமா?" என்று அவன் தெரியாது என்றான். அதற்கு அவர் "நீ உன் வாழ்நாளில் பாதியை வீணாக்கி விட்டாய், சரி மகாபாரதமாவது தெரியுமா" என கேட்க அதற்கும் அவன் தெரியாது என, அந்த ஞானி "நீ உன் வாழ்நாளில் முக்கால் வாசி வீணடித்து விட்டாயே.." என்றார்.
பரிசல் கொஞ்ச தொலைவு சென்றதும் பரிசலில் ஓட்டை விழுந்து நீர் குபு குபு என உள்ளே வர ஆரம்பித்தது. அந்த பாமரன் அந்த ஞானியிடம் கேட்டான் "அய்யா உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" அதற்கு அந்த ஞானி சொன்னார் "தெரியாது". அந்த பாமரன் சொன்னான் "அய்யா இன்னும் கொஞ்சம் நேரத்தில் பரிசல் மூழ்க போகிறது .. நீங்கள் உங்கள் முழு .வாழகையையே வீணடித்து விட்டீர்கள் ....எஸ்கேப்" என்று நீந்தி பிழைத்தது
கொண்டான்.
இது போல்தான் நாமும் நம் குழந்தைகளை வளர்கிறோம். பயிர்களுக்கு வேகமாக வளர வேண்டும் என்று தேவையில்லாத வேதி உரங்களை போட்டு வளர்ப்பது போல. இயற்கையில் எப்படி ஒவ்வொரு கனியும் மா, பலா, வழை என தனகென ஒரு தனித்துவம் கொண்டு விளங்குகிறதோ அதே போல் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மற்ற குழந்தைகளோடு நம் குழந்தைகளை எப்போதும் ஒப்பிட்டு அவர்களை குறை கூறுவது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை (inferiority complex ) உண்டாக்கும் . அதை மதித்து காலத்தின் போக்கில் இயற்கையாக அவர்களை வளர விட வேண்டும். அவர்கள் தவறான் வழிக்கு தடம் மாறி போகாமல் பார்த்து கொள்ள வேண்டியது நம் கடமை. அவர்கள் கல்வி கற்க ஒரு ஆரோக்யமான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால் போதும். அவ்வபோது இடையே அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடவோ, டிவி பார்க்க அனுமதிபதலோ எந்த தவறும் இல்லை. மாறாக அது மன அழுத்ததிலிறிந்து(stress ) அவர்கள் மூளைக்கு சற்று புத்துணர்வு கிடைக்கும்.

ஒரு முறை விஞ்ஞானி Enstein இடம் நிருபர்கள் அவர் தியரி குறித்த வினாவிற்கு அவர் சொன்னது. "எனக்கு நினைவில்லை என் ஏட்டு குறிப்பை பார்த்துதான் சொல்ல வேண்டும்" என்றாராம். அதற்கு நிருபர் கேட்டாராம் "நீங்கள் கண்டுபிடித்த விஷயம்..உங்களுக்கே நினைவில்லையா என்று வினவ, அதற்கு அவர் சொன்னாராம் "உண்மைதான், தேவை பட்டால் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான், எதற்காக மூளைக்குள் எல்லா விஷயங்களையும் போட்டு திணிக்க வேண்டும் ?"

உண்மைதான். எதற்காக நேரத்தை செலவழித்து உலகத்திலுள்ள எல்லா நாட்டின் தலை நகரங்களையும் மனப்பாடம் செய்ய சொல்லி குழந்தைகளை torture செய்ய வேண்டும்? இந்த நவீன உலகத்தில் Google , spellcheck விரல் நுனியில் இருக்கும் போது எதற்கு இந்த போராட்டம்?

ஆக ஒரு குழத்தை எப்படி அறிவாளியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் புத்திசாலியாக இருக்க வேண்டியதும் மிக முக்கியம். அப்போதுதான் இந்த உலகத்தின் போராட்டங்களை சந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். சரி இதோடு முடித்து கொள்கிறேன். பசங்க homework முடிசிடாங்கலானு பாக்கணும்!
-Bala

1 comment:

  1. #அறிவாளி வாழ்வியலில் தோற்றதற்கு காரணம் அவர்கள் பெற்றோர். அவருக்கு வெளியே சென்று அடிபட்டு அனுபவ படிப்பினை அறிந்து கொள்ளும் வாய்பே கொடுக்க பட வில்லை#

    சரியாக சொன்னிங்க தலைவா....
    இப்போலாம் குண்டு சட்டியில குதிரை ஓட்றவங்க தான் ஜாஸ்தி...
    ஏட்டு சுரக்காய் கூட்டிற்கு உதவாது.
    நிறையபேருக்கு தெரில... வாழ்கையின் அனுபவ பாடம் தான் முக்கியம்....
    ரொம்ப நன்னா எழுதி இருக்கேள்.. இன்னும் எழுதுங்கோ... என்னுடைய வாழ்த்துக்கள்....

    ReplyDelete