Wednesday, August 28, 2013

ஜாதி (கவிதை )


பன்றியின் உடலில் 

செய்த 'வால்வை '

கூட பழுது பட்ட இதயம்

ஏற்று கொள்ளும் போது 

பண்பட்ட இரு  மனங்கள் 

இணையும் வாழ்வை 

ஏற்றுகொள்ள உங்கள்

இதயம் ஏன் மறுக்கிறது ...?

காதல் போயின் ...(கவிதை )


இணையாத
தண்டவாளங்களுக்கு
இடையே
சிதறி கிடந்தது
இணைய முடியாமல் போன 
ஒரு காதல் ...

ராசி (கவிதை )


சனி உச்சத்தில் 

இருந்த

மேஷமும் 

ரிஷபமும் 

கசாப்பு கடைக்கு
 
சென்று

கொண்டிருந்தன ...

அருந்ததி (கவிதை )



கற்பொழுக்கம் கற்க 
கண்ணுக்கு 
தெரியாத அருந்ததியை
வானில் மணமகன் 
காட்ட 
அம்மி மிதித்த
மணப்பெண்ணுக்கு
எழுந்தது ஐயம்.. 
இதோ கண்முன் 
தெரியும் தாயும் 
தங்கையும் தெரியாமல்
போனதேன் ..?