Wednesday, August 28, 2013
ஜாதி (கவிதை )
பன்றியின் உடலில்
செய்த 'வால்வை '
கூட பழுது பட்ட இதயம்
ஏற்று கொள்ளும் போது
பண்பட்ட இரு மனங்கள்
இணையும் வாழ்வை
ஏற்றுகொள்ள உங்கள்
இதயம் ஏன் மறுக்கிறது ...?
காதல் போயின் ...(கவிதை )
இணையாத
தண்டவாளங்களுக்கு
இடையே
சிதறி கிடந்தது
இணைய முடியாமல் போன
ஒரு காதல் ...
அருந்ததி (கவிதை )
கற்பொழுக்கம் கற்க
கண்ணுக்கு
தெரியாத அருந்ததியை
வானில் மணமகன்
காட்ட
அம்மி மிதித்த
மணப்பெண்ணுக்கு
எழுந்தது ஐயம்..
இதோ கண்முன்
தெரியும் தாயும்
தங்கையும் தெரியாமல்
போனதேன் ..?
Subscribe to:
Posts (Atom)