Friday, March 22, 2013

கோரிகையற்றுக் கிடக்குதண்ணே...(கவிதை )






கல்யாண சந்தையில்

காட்சி பொருளாய்

காத்திருக்கிறாள் என் அக்கா...

கட்டிய சேலையுடன்

வந்தால் போதும் என

இந்த தேவதை கரம் பிடிக்க 

ஒரு ராமன் இன்று வருவானோ ?

இல்லை போதாது வரதட்சிணை  என்று

இவனும் போவானோ பத்தோடு

பதினொன்றாய் ?


(Picture courtery: Oil paint by artist Ilayaraja)

No comments:

Post a Comment