Tuesday, May 29, 2012
என்றோ காட்டிய அன்பு (Kavithai)
சேற்றை வாரி இறைத்தாலும்
சந்தனமாய் மாற்றுவேன் , நீ
எறியும் கற்கள் பூக்களாய் மாறும்
என் பாதையில் நீ தூவிடும் முட்களும்
ரோஜா மெத்தையாகும்
உன் தூற்றல்களும் தூரலாகும்
ஏன் தெரியுமா....?
என்றோ நீ காட்டிய அன்பு இன்னும்
ஈரமாய் என் நெஞ்சில் இருப்பதனால்...
சமூக வலைத்தளம்...(சிந்தனை துளி )
ஒரு காலத்தில் பல நாட்கள் கழித்து கிடைக்கும் தபாலில் பரிவர்த்தனைகள் இருந்தது. அதன் பிறகு தொலைபேசி. இப்போது கணினி யுகம்.
சமூக வலை தளங்கள். இப்போது உலகத்தின் ஒரு மூலையில் நடக்கும் விஷயத்தை அடுத்த நொடியில் வேறெங்கோ இருக்கும் மற்றவருடன் உடனே பகிர முடிகிறது. வேகம்..வேகம் எல்லாவற்றிலும் வேகம்.
சமூக வலைத்தளங்களை எதிர்த்தவர்கள் கூட அதன் அத்தியாவசியதினை புரிந்து கொள்ள ஆரம்பிதிருக்கிரார்கள். அது ஆடம்பரம் என்கிற நிலைமையினை தாண்டி அவசியமாகி விட்ட கால கட்டத்தில் நாம் இப்போது இருக்குறோம்.
பழைய தலைமுறையினர் பலரும் கூட இப்போது மெதுவாக இதில் நுழைய ஆரம்பிதிருக்கிரார்கள். மேலும் எதிர் காலத்தில் smart phone களின் பிரவேசத்தால் இப்போது கணினி முன் உட்கார்ந்து நேரம் செலவிட வேண்டிய காட்டாயம் இல்லாமால் உலகமே நம் உள்ளங்கைக்குள் சுருங்கி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆனாலும்.....
எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் மனிதர்களின் அடிப்படை குணங்கள் என்றும் மாறபோவதில்லை. மனிதர்கள் பலவித குணாதிசயங்களால் பின்னப்பட்டவர்கள். தின நடைமுறை வாழ்கையில் கோபம், தாபம், சந்தோஷம் என பல உணர்சிகளினால் நாம் எப்போதும் உந்தப்பட்டிருக்கிறோம். யோசித்து பார்த்தால் நாம் சந்திக்கும் இப்போதைய மனிதர்கள் முன்பை விட மிக மிக நுண்ணியவர்களாக (sensitive ) இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
இப்படி பல தரப்பட்ட மனிதர்களுடன் interact செய்வது என்பது கண்ணை மூடிக்கொண்டு கம்பியின் மேல் நடப்பது போல் ஒரு தனி கலை. இதை திறம்பட கையாள முடியாவிட்டால் நாம் பல காயங்களை காண நேரிடும். நேரடியாகவோ தொலை பேசியிலோ கருத்து பரிமாற்றங்கள் நடக்கும் போது மறுபக்கம் இருப்பவரின் தோரணையை குரலின் தோணி (tone ) வைத்து தெரிந்து கொள்ளாலாம். ஆனால் எழுத்து மூலம் கருத்து பரிமாற்றங்கள் நடைபெரும் போது பல சமயங்களில் நாம் சொல்ல வந்ததை பலர் தவறாக புரிந்துகொள்ள வாய்பிருக்கிறது. நாம் நினைப்பதை நினைத்தபடி எழுத்து மூலம் மற்றவர்களுக்கு புரியவைப்பதும் ஒரு கலையே. அதோடு எழுத்து பதிவுகள் நிரந்தரமானவை. பாதிக்க பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றை பார்த்து மன வருத்தம் அடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. நல்ல நண்பர்கள் கிடைப்பது மிக அரிது. தேன் கூடு போல பல வருடங்கள் வளர்ந்த நட்பு ஒரு தவறான கல்லினால் ஒரு நொடியில் கலையகூடும்.
எந்த பதிவுகளையும் பதிக்கும் முன் ஒருமுறைக்கு பல முறை திருமண பத்திரிகையை proof பார்த்தல் போல படித்து பார்த்து பதித்தல் நல்லது. மேலும் கோபத்தில் இருக்கும் போது எடுக்கப்படும் எந்த முடிவுமே நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அந்த மாதிரி நேரங்களில் எதையும் உடனே பகிராமல் நேரம் எடுத்துக்கொண்டு மனம் சமாதானமாக இருக்கும் போது கருத்து பரிமாற்றம் செய்தல் நலம். ஆரோக்யமான விவாதங்கள் அறிவை வளர்க்கும். விவாதங்கள் எல்லை மீறும் போது மன வருத்தங்களையும் பகைமை உணர்வுகளையும் காழ்புணர்ச்சியையும் வளர்க்கும். மன நிம்மதியும் உறக்கமும் கெடும்.
முடிவாக உங்கள் சிந்தனைக்கு. "நாடாது நட்டலிற் கேடில்லை நட்பின் வீடில்லை நட்பாள் பவர்க்கு." அதாவது, அன்புடன் பழகிய பின் நட்பை விடுதல் என்பது நட்பிற்கு அழகில்லை. அதனால் ஆராயாமல் நட்பு செய்வதை விட வேறு கேடில்லை.
சமூக வலை தளங்கள். இப்போது உலகத்தின் ஒரு மூலையில் நடக்கும் விஷயத்தை அடுத்த நொடியில் வேறெங்கோ இருக்கும் மற்றவருடன் உடனே பகிர முடிகிறது. வேகம்..வேகம் எல்லாவற்றிலும் வேகம்.
சமூக வலைத்தளங்களை எதிர்த்தவர்கள் கூட அதன் அத்தியாவசியதினை புரிந்து கொள்ள ஆரம்பிதிருக்கிரார்கள். அது ஆடம்பரம் என்கிற நிலைமையினை தாண்டி அவசியமாகி விட்ட கால கட்டத்தில் நாம் இப்போது இருக்குறோம்.
பழைய தலைமுறையினர் பலரும் கூட இப்போது மெதுவாக இதில் நுழைய ஆரம்பிதிருக்கிரார்கள். மேலும் எதிர் காலத்தில் smart phone களின் பிரவேசத்தால் இப்போது கணினி முன் உட்கார்ந்து நேரம் செலவிட வேண்டிய காட்டாயம் இல்லாமால் உலகமே நம் உள்ளங்கைக்குள் சுருங்கி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆனாலும்.....
எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் மனிதர்களின் அடிப்படை குணங்கள் என்றும் மாறபோவதில்லை. மனிதர்கள் பலவித குணாதிசயங்களால் பின்னப்பட்டவர்கள். தின நடைமுறை வாழ்கையில் கோபம், தாபம், சந்தோஷம் என பல உணர்சிகளினால் நாம் எப்போதும் உந்தப்பட்டிருக்கிறோம். யோசித்து பார்த்தால் நாம் சந்திக்கும் இப்போதைய மனிதர்கள் முன்பை விட மிக மிக நுண்ணியவர்களாக (sensitive ) இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
இப்படி பல தரப்பட்ட மனிதர்களுடன் interact செய்வது என்பது கண்ணை மூடிக்கொண்டு கம்பியின் மேல் நடப்பது போல் ஒரு தனி கலை. இதை திறம்பட கையாள முடியாவிட்டால் நாம் பல காயங்களை காண நேரிடும். நேரடியாகவோ தொலை பேசியிலோ கருத்து பரிமாற்றங்கள் நடக்கும் போது மறுபக்கம் இருப்பவரின் தோரணையை குரலின் தோணி (tone ) வைத்து தெரிந்து கொள்ளாலாம். ஆனால் எழுத்து மூலம் கருத்து பரிமாற்றங்கள் நடைபெரும் போது பல சமயங்களில் நாம் சொல்ல வந்ததை பலர் தவறாக புரிந்துகொள்ள வாய்பிருக்கிறது. நாம் நினைப்பதை நினைத்தபடி எழுத்து மூலம் மற்றவர்களுக்கு புரியவைப்பதும் ஒரு கலையே. அதோடு எழுத்து பதிவுகள் நிரந்தரமானவை. பாதிக்க பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றை பார்த்து மன வருத்தம் அடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. நல்ல நண்பர்கள் கிடைப்பது மிக அரிது. தேன் கூடு போல பல வருடங்கள் வளர்ந்த நட்பு ஒரு தவறான கல்லினால் ஒரு நொடியில் கலையகூடும்.
எந்த பதிவுகளையும் பதிக்கும் முன் ஒருமுறைக்கு பல முறை திருமண பத்திரிகையை proof பார்த்தல் போல படித்து பார்த்து பதித்தல் நல்லது. மேலும் கோபத்தில் இருக்கும் போது எடுக்கப்படும் எந்த முடிவுமே நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அந்த மாதிரி நேரங்களில் எதையும் உடனே பகிராமல் நேரம் எடுத்துக்கொண்டு மனம் சமாதானமாக இருக்கும் போது கருத்து பரிமாற்றம் செய்தல் நலம். ஆரோக்யமான விவாதங்கள் அறிவை வளர்க்கும். விவாதங்கள் எல்லை மீறும் போது மன வருத்தங்களையும் பகைமை உணர்வுகளையும் காழ்புணர்ச்சியையும் வளர்க்கும். மன நிம்மதியும் உறக்கமும் கெடும்.
முடிவாக உங்கள் சிந்தனைக்கு. "நாடாது நட்டலிற் கேடில்லை நட்பின் வீடில்லை நட்பாள் பவர்க்கு." அதாவது, அன்புடன் பழகிய பின் நட்பை விடுதல் என்பது நட்பிற்கு அழகில்லை. அதனால் ஆராயாமல் நட்பு செய்வதை விட வேறு கேடில்லை.
Tuesday, March 6, 2012
திரையில் நான்
திரையில் லிரில் அழகி குளித்து கொண்டிருந்தாள். நல்ல வேலை யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ள வில்லை.
நல்ல இடமாக பார்த்து அமர்ந்தேன்.
பல சோதனைகளுக்கு பிறகு பிரயர்த்தனபட்டு உழைத்து ஒரு படம் வெளி வரும் போது...பிரவசவிக்கும் ஒரு தாயின் ஆனந்தம், பரவசம். இது என் 100 வது படம். பல இன்னல்களுக்கு பிறகு படிப்படியாய் முன்னேறி சாதாரண அமரேசன் இன்று
பல்லாயிரம் ரசிகர்களின் மனதில் சுப்ரீம் ஸ்டார் அமர்நாத் ஆக இடம் பிடித்திருப்பதை நினைக்கும் போது உள்ளுக்குள் பூரிப்பாய் இருக்கிறது.
இப்படி ஜனங்களில் ஒருவனாய் கலந்து ஒரு சாராரி ரசிகனாய் மாறி அவர்களுடன் படம் பார்க்கும் போது என் நிறை குறைகளை துல்லியமாய் கணித்து என்னை மேலும் பதபடுத்தி ஒரு பண்பட்ட கலைஞனாக வளர்த்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு படமும் என் முன்னேற்றத்தின் படிக்கட்டு.
விளம்பரங்கள் முடிந்து பெயர் ஓட ஆரம்பித்தது. வழக்கம் போல் ஒபெனிங் சீனில் நான் தோன்றியதும் விசிலும், கை தட்டலும் பறந்தது.
என் ரசிகர்களுடைய உணர்வுகளை நேரடியாக காணும் போது, அவர்களின் நாடி துடிப்பை நேரடியாக என்னால் உணர முடிகிறது. என்னுடைய வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். அதுவும் இந்த படம் என் 100 படம் என்பதனால் எல்லா சண்டை காட்சிகளிலும் "டூப்" போடாமல் என் முழு திறமையும் காட்டியதில் எனக்கு மிக பெருமை.
இதோ க்ளைமாக்ஸ் காட்சி... வில்லனை துரத்தி கொண்டு 15 மாடி கட்டிடத்தின் மேல் இருந்து குதிக்கும் காட்சி..
அந்த frame freez செய்யப்படுகிறது.....!!!?? .பிண்ணணியில் ஒரு குரல்..
"இந்த காட்சியில் தன் உயிரையும் பொருட்படுத்தாது நடித்து கலைக்காக தன் உயிரை அர்ப்பணித்து கொண்ட supreme ஸ்டார் அமர்நாத் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி..."
வில்லனை துரத்திக்கொண்டு என் டூப் திரையில் ஓடி கொண்டிருந்தான்....கைதட்டலும் விசிலும் பறந்தது.
( கல்லூரி நாட்களில் குமுதத்தில் பிரசுரமான என் சிறுகதை )
நல்ல இடமாக பார்த்து அமர்ந்தேன்.
பல சோதனைகளுக்கு பிறகு பிரயர்த்தனபட்டு உழைத்து ஒரு படம் வெளி வரும் போது...பிரவசவிக்கும் ஒரு தாயின் ஆனந்தம், பரவசம். இது என் 100 வது படம். பல இன்னல்களுக்கு பிறகு படிப்படியாய் முன்னேறி சாதாரண அமரேசன் இன்று
பல்லாயிரம் ரசிகர்களின் மனதில் சுப்ரீம் ஸ்டார் அமர்நாத் ஆக இடம் பிடித்திருப்பதை நினைக்கும் போது உள்ளுக்குள் பூரிப்பாய் இருக்கிறது.
இப்படி ஜனங்களில் ஒருவனாய் கலந்து ஒரு சாராரி ரசிகனாய் மாறி அவர்களுடன் படம் பார்க்கும் போது என் நிறை குறைகளை துல்லியமாய் கணித்து என்னை மேலும் பதபடுத்தி ஒரு பண்பட்ட கலைஞனாக வளர்த்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு படமும் என் முன்னேற்றத்தின் படிக்கட்டு.
விளம்பரங்கள் முடிந்து பெயர் ஓட ஆரம்பித்தது. வழக்கம் போல் ஒபெனிங் சீனில் நான் தோன்றியதும் விசிலும், கை தட்டலும் பறந்தது.
என் ரசிகர்களுடைய உணர்வுகளை நேரடியாக காணும் போது, அவர்களின் நாடி துடிப்பை நேரடியாக என்னால் உணர முடிகிறது. என்னுடைய வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். அதுவும் இந்த படம் என் 100 படம் என்பதனால் எல்லா சண்டை காட்சிகளிலும் "டூப்" போடாமல் என் முழு திறமையும் காட்டியதில் எனக்கு மிக பெருமை.
இதோ க்ளைமாக்ஸ் காட்சி... வில்லனை துரத்தி கொண்டு 15 மாடி கட்டிடத்தின் மேல் இருந்து குதிக்கும் காட்சி..
அந்த frame freez செய்யப்படுகிறது.....!!!?? .பிண்ணணியில் ஒரு குரல்..
"இந்த காட்சியில் தன் உயிரையும் பொருட்படுத்தாது நடித்து கலைக்காக தன் உயிரை அர்ப்பணித்து கொண்ட supreme ஸ்டார் அமர்நாத் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி..."
வில்லனை துரத்திக்கொண்டு என் டூப் திரையில் ஓடி கொண்டிருந்தான்....கைதட்டலும் விசிலும் பறந்தது.
( கல்லூரி நாட்களில் குமுதத்தில் பிரசுரமான என் சிறுகதை )
Monday, January 2, 2012
உள்ள என்ன இருக்கு ..?

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்துக்கள். எல்லோரும் party hangover முடிஞ்சி, தெளிஞ்சி மீண்டும் அதே பழைய நடைமுறை வாழ்க்கைக்கு வந்திருப்பீங்கன்னு நம்புறேன். உங்களுக்கெல்லாம் leonardo da Vinci பத்தி தெரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்கிறேன். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக பெரிய இத்தாலிய ஓவியர் . இவர் ஒரு ஓவியர் மட்டுமல்ல மிக பெரிய சிந்தனையாளர், பெரிய architecht -ம் கூட. இவருடைய உலக புகழ் பெற்ற படைப்புகள் மோன லிசா , last supper .இன்னும் பல . அது மட்டுமல்ல மனித உடற்கூறிலும் இவர் வல்லுநர். இவரை அப்போதைய கத்தோலிக்கர்கள் எதிர்த்தனர். ஏனென்றால் இவருடைய ஓவியங்களில் கதோலிகர்களின் நம்பிக்கைக்கு முரணான செய்திகள் மர்மமாக ஒளித்து வைக்க பட்டிருக்கும். அது மட்டுமல்ல இவருடைய படைப்புகளில் சாமானியனுக்கு புரிபடாத ஏதாவது ஒரு செய்தி ஒளிந்திருக்கும். இவருடைய மோன லிசா ஓவியத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் இன்று வரை பல வல்லுனர்களை சிண்டை பிய்த்துக்கொள்ள வைத்திருக்கிறது.
பெரிய சிந்தனையாளர்கள் காலத்துக்கு அப்பார் பட்டவர்கள் .இப்படி சித்து விளையாட்டு விளையாடுவது அவர்களுக்கு கை வந்த கலை. வருங்கால தலை முறைக்கு ஏதாவது ஒரு செய்தியை ஒளித்து வைத்து அந்த புதிரை சவாலாக வரும் தலை முறைக்கு வைப்பது அவர்களுக்கு வேடிக்கை. இந்த விளையாட்டை நம் சித்தர்களும் கையாண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு "நந்த வனத்தில் ஒரு ஆண்டி , அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி " இந்த சித்தர் பாடலை மேம்போக்காக பார்த்தால் சிரிப்பான நையாண்டி போல் தெரியும். ஆனால் இதில் ஆழமான வாழ்க்கையின் தத்துவம் ஒளிந்திருக்கிறது. நந்தவனத்தில் - இந்த மானிட பிறவியில், ஆண்டி - நாம், நாலாறு மாதம்- நான்கும் ஆறும் பத்து மாதங்கள் , குயவனை வேண்டி-கடவுளிடம் வேண்டி , கொண்டு வந்தான் ஒரு தோண்டி- நம் மானிட பிறப்பான உடல், கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி - பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நம் வாழ்கை நாம் ஆடும் ஆட்டங்கள் இவையெல்லாம் ஒரு முடிவுக்கு வருபவையே .இதே போல் சித்தர்கள் காடுகளில் திரிந்து பல நோய்களுக்கு மூலிகை மருந்துகளை கண்டு பிடித்து அவற்றையெல்லாம் சித்தர் பாடல்களில் ஒளித்து வைத்தார்கள்.எதற்காக பெரிய ஞானிகளும் சித்தர்களும் இப்படி ஒரு சித்து விளையாட்டு விளையாட வேண்டும். எதற்காக வெளிப்படையாக எளிதில் புயும் படி சொல்லியிருக்க கூடாது.? எந்த விஷயமும் வெளிப்படையாக இருந்தால் அதில் சுவாரசியமோ , அதன் முக்கிய துவமோ அவ்வளவாக தெரியாது. இல்லை மறை காயாக சொல்லப்படும் விஷயங்களை நாம் தேடி கண்டு பிடிக்கும் போது அதன் சுவாரசியமே தனி. அது மட்டுமல்ல, தங்களின் நீண்ட கால உழைப்பின் பலனை எளிதாக மற்றவர்கள் "நோவாம நோம்பு கும்பிட" பிடிக்காமலும் இருக்கலாம். மூடி வைத்த ஒன்றை திறந்தது பார்த்திட தோன்றும் மனித இயல்பினை பயன் படுத்தி தங்கள் படைப்புகளில் அற்புதமான ரகசியங்களை ஒளித்து வைக்கும் அப்படி பட்ட சித்தர்களின் சித்து விளையாட்டு எனக்கும் ரொம்ப பிடுக்கும்.
"பாட்டு படிச்சா சங்கதி உண்டு..என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு... கண்டு பிடி.."
புதிதாக பதிவுகள் ஏதாவது படைக்க இருக்கும் நண்பர்கள் உங்கள் படைப்புகளிலும் ஏதாவது ஒன்றை மறைத்து வையுங்கள். அதன் சுவாரசியம் ரொம்பவே கூடும்...!!
Subscribe to:
Posts (Atom)